உண்மையா? பொய்யா? காரில் ஏறி குழந்தையின் முகத்தை நக்கிய சிறுத்தை…. வைரல் வீடியோவால் இணையமே ஷாக்…. இது AI வேலையா….?
SeithiSolai Tamil October 21, 2025 12:48 PM

ஒரு வைரல் வீடியோவில், சஃபாரி காரில் இருக்கும் போது திடீரென ஒரு சிறுத்தை வந்து ஏறுகிறது. அது மக்களை உணவாக நினைத்து வருகிறது. காரில் இருந்த அனைவரும் பயந்து அசையாமல் சிலையைப் போல நிற்கிறார்கள். குறிப்பாக ஒரு சிறு குழந்தை தைரியமாக அசையாமல் இருக்கிறது. சிறுத்தை குழந்தையின் முகத்தை நக்கிப் பார்க்கிறது, ஆனால் இவர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்று குழம்பி, இறுதியில் திரும்பிப் போய்விடுகிறது. குழந்தையின் தைரியமே சிறுத்தையை விரட்டியது.

இந்த வீடியோவை Rebellious 2.0 என்ற எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். பலர் இதை ஏஐ உருவாக்கியது என்று சொல்கிறார்கள், உண்மையில்லை என்கிறார்கள். சிலர் வெளிநாடுகளில் இது சகஜம் என்று கூறுகிறார்கள். வேறு சிலர், இப்போது மனிதர்களே அதிக ஆபத்தானவர்கள், விலங்குகள் இல்லை என்கிறார்கள். வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், ஷேர்கள், கமெண்ட்கள் வந்துள்ளன. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.