சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
நாளையும் பெரும்பாலான இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் நிலை காத்திருக்கிறது.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31–32° செல்சியஸை, குறைந்தபட்ச வெப்பநிலை 24–25° செல்சியஸை ஒட்டியிருக்கும். நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?