பஞ்சாங்கம் அக்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil October 24, 2025 12:48 PM

பஞ்சாங்கம் அக்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%

astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம் அக்.24 – வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||
!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஐப்பசி~ * 7 (24.10.2025) வெள்ளி* கிழமை.*
வருடம் ~ விச்வாவஸு{விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம்~ * ஐப்பசி மாஸம் { துலா மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 11.52 pm வரை த்ரூதியை பின் சதுர்த்தி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம்~ அனுஷம்
யோகம் ~ ஸௌபாக்யம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.07
சந்திராஷ்டமம் — மேஷம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்
ஸ்ரார்த்த திதி ~ த்ருதியை
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 24.10.2025

நாளைய (24-10-2025) ராசி பலன்கள்

மேஷம்

உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : நெருக்கடிகள் ஏற்படும்.

ரிஷபம்

வருங்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான சில வழக்கு சாதகமாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

கிருத்திகை : சிந்தனை மேம்படும்.
ரோகிணி : ஆரோக்கியம் மேம்படும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : பேச்சுக்களால் ஆதாயம்.
புனர்பூசம் : முடிவுகளில் கவனம்.

கடகம்

குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

புனர்பூசம் : சந்தோஷமான நாள்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : ஆர்வம் பிறக்கும்.

சிம்மம்

விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதங்கள் உருவாகலாம். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
பூரம் : தாமதங்கள் உண்டாகும்.
உத்திரம் : எதிர்ப்புகள் நீங்கும்.

கன்னி

எதிர்பார்த்த சில ஒப்பந்தம் சாதகமாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை உருவாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான தேடல்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : ஒப்பந்தம் சாதகமாகும்.
அஸ்தம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
சித்திரை : தேடல்கள் அதிகரிக்கும்.

துலாம்

ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கவனம் வேண்டும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். நெருங்கியவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனம் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நில நிறம்

சித்திரை : சிந்தனைகள் பிறக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம்

உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்களில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : அனுபவம் கிடைக்கும்.
அனுஷம் : அலைச்சல் ஏற்படும்.
கேட்டை : அலட்சியமின்றி செயல்படவும்.

தனுசு

தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : செலவுகள் ஏற்படும்.
பூராடம் : தடைகள் நீங்கும்.
உத்திராடம் : சஞ்சலம் ஏற்படும்.

மகரம்

குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். வியாபாரம் சிறப்பாக அமையும். கோபம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : அமைதி பிறக்கும்.
அவிட்டம் : ஆதரவு பெருகும்.

கும்பம்

சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.

மீனம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் அமையும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : ஆதரவு பெருகும்.
உத்திரட்டாதி : திருப்தியான நாள்.
ரேவதி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.

இன்றைய சிந்தனைக்கு…

பெருந்தன்மை என்பது, உன்னால் முடிந்ததை விட, அதிகமாக கொடுப்பது, பெருமை என்பது, உனக்கு தேவையானதை விட, குறைவாக எடுத்து கொள்வது! நீ அன்புடன் செய்யும், சின்ன செயல் கூட, ஒருவரின் வாழ்க்கையில், பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும், உலகில் அன்பை விட, வலிமையானது எதுவுமில்லை!!
உறவுகளில், யார் முக்கியம் என்பதை, உயிர் அற்ற பணமே, முடிவு செய்கிறது; பணம் கொடுத்து பார், உறவுகள் உன்னை போற்றும், அதை திரும்ப கேட்டுப் பார், மண்ணை வாரி தூற்றும்!!!

பஞ்சாங்கம் அக்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.