இந்திய துணை ஜனாதிபதி பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. அதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதன்படி வரும் 28-ந்தேதி தமிழகத்திற்கு வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். மறுநாள் 29-ந்தேதி திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளார்.