ஆம்னி சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
Dinamaalai November 04, 2025 04:48 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ்சில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த அந்த பஸ், பல்லடம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென புகை எழுந்தது. இதைக் கண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை நடுவே நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ பரவியதை கண்டு பயணிகள் அவசரமாக பஸ்சிலிருந்து கீழே இறங்கி தப்பினர். சில நிமிடங்களில் தீ பஸ் முழுவதும் சூழ்ந்தது. தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியான செய்தியாகும். பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணத்தை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.