இன்று அக்டோபர் 28ம் தேதி, சென்னையில் கொட்டும் மழையிலும் திமுக தேர்தல் பயிற்சி கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்துக் கொள்வதற்காக குவிந்துள்ளனர்.
விரைவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் இன்று அக்டோபர் 28ம் தேதி நடைபெறும் என்று முன்னதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில் அமைந்துள்ள ‘கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில்’ இன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சி நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிகாட்டல் வழங்கப்படும்.

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய பாஜக அரசின் “வஞ்சக சூழ்ச்சிக்கு எதிராக தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்துடன் பரப்புரை தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த தேர்தல் பயிற்சிக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்வதற்காக இன்று காலையிலேயே கொட்டும் மழையிலும் ஈசிஆரில் குவிந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?