பீகார் சட்டமன்றத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு ... தேஜஸ்வி யாதவ் குடும்பத்துடன் வாக்களிப்பு!
Dinamaalai November 06, 2025 05:48 PM

 

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், பாட்னாவில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். அவருடன் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரும் வாக்களித்தனர்.

வாக்களித்த பிறகு தேஜஸ்வி யாதவ், “புதிய பீகாரை உருவாக்க, புதிய ஆட்சியை உருவாக்குங்கள்” என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த முதல்கட்டத்தில் அவர், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும்.

மாநிலம் முழுவதும் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3.92 கோடி ஆண்களும், 3.50 கோடி பெண்களும் ஆவர். மொத்தம் 90,071 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்கள் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, “பீகாரில் ஜனநாயகத் திருவிழா தொடங்கியது, அனைவரும் உற்சாகத்துடன் வாக்களியுங்கள்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.