மாணவி மீது தாக்குதல் நடத்திய சினிமா ஏஜெண்ட்... 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை தட்டித் தூக்கிய காவல்துறை!
Dinamaalai November 07, 2025 10:48 PM

 

சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது பெண் இன்ஜினியரிங் மாணவி, குடும்பச் சூழ்நிலை காரணமாக சினிமா துறையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார். சினிமா படப்பிடிப்பிற்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து தரும் ஏஜென்டான ரிஷிவிக்ரமன் என்ற இளைஞர் அவருடன் பழகி வந்தார். கடந்த நான்கு மாதங்களாக காதல் தொடர்பில் இருந்த இவரது நடத்தை மாற்றம் அடைந்ததை உணர்ந்த மாணவி, அவருடன் தொடர்பை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ரிஷிவிக்ரமன், மதுரவாயல் சாலையில் மாணவியை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசிச் சென்றுள்ளார். மதுரவாயல் போலீசார் புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராயபுரம் கிரேஸ் கார்டனில் இருந்து ரிஷிவிக்ரமனை கைது செய்தனர்.

இதற்கிடையில், சென்னை குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் 20 வயது இளைஞர் ஆகாஷ் தன் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகள் அலறியடித்தபடி ஓடிய நிலையில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆகாஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், தாயுடன் ஏற்பட்ட சண்டையால் மது போதையில் தற்கொலை முயற்சிக்கு முயன்றது தெரியவந்தது.

மேலும், 2001 ஆம் ஆண்டு பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளாக தலைமறைவில் இருந்த அப்பன்தாஸ் என்ற குற்றவாளி, தாம்பரம் அருகே வேங்கைவாசலில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாறுவேடத்தில் செயல்பட்ட போலீசார் அவரை ரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைத்து பிடித்தனர். இந்த கைது, நீண்டகாலமாக தேடப்பட்ட குற்றவாளியை பிடித்த முக்கிய வெற்றியாக சென்னை காவல்துறையால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.