பாட்னாவில் கொண்டாட்டம்... இன்று 10வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்!
Dinamaalai November 20, 2025 10:48 AM

பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்தின் (Janata Dal (United), JD(U)) சட்டசபை கட்சித் தலைவர் நிதிஷ் குமார், இன்று நவம்பர் 20ம் தேதி வியாழக்கிழமை, 10வது முறையாக புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கடுமையான வெற்றி பெற்றது: அதில் பா.ஜனதா 89 தொகுதிகள், JD(U) 85 தொகுதிகள் வெற்றி பெரித்துள்ளது. அதன்படி, புதிய அரசு அமைக்கப்பட்டு, JD(U) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ் குமாரை கட்சித் தலைவர் ஒருமனதோடு தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில், தனது வழிகாட்டுதலினால் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக “ஓய்வின்றி உழைப்பேன்” என்று நிதிஷ்குமார் தனது உரையில் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே தான் பின்பற்றிய வளர்ச்சி திட்டங்களை தொடர வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இன்று பதவியேற்பு விழா பாட்னாவில் நடைபெறுகிறது. அங்கு கவர்னர் ஆரிப் முகமது கான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். நிதிஷ் குமார் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.