சிறுநீரில் துர்நாற்றம் வீசுதா இத பண்ணுங்க பிரச்சினை சரியாயிடும்..!
Top Tamil News November 21, 2025 09:48 AM

சிறுநீர் பாதை தொற்று என்பது ஆண், பெண் இருவருக்குமே ஏற்படும் ஒரு பிரச்சனை தான். ஆனாலும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் இது மிக அதிக அளவில் வருகிறது.

எல்லா பெண்களுமே தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த சிறுநீர் பாதை தொற்று அனுபவிக்கிறார்கள் என்றும் பெண்களின் ஐந்து பேரில் ஒருவருக்கு இந்த பிரச்சனை மிக சாதாரணமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இந்த சிறுநீர் பாதை தொற்றானது சிறுநீர் குழாய் பகுதியில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் தொற்றின் காரணமாக ஏற்படுவது.

சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் பொழுது குறிப்பாக பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதிகளில் கடுமையான அரிப்பும் எரிச்சலும் ஏற்படும். சிலருக்கு கடுமையான வயிற்று வலி இருக்கும்.

மற்ற சமயங்களைக் காட்டிலும் இந்த சமயத்தில் சிறுநீர் வெளியேறும் போது அதிக துர்நாற்றத்துடன் வெளியேறும்.

பொதுவாக ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமே அவர்களுடைய உடல் அமைப்பு தான். அவர்களுடைய பிறப்புறுப்பு பகுதியில் அமைப்புதான் இதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அதைத்தாண்டி வேறு பல காரணங்களும் உண்டு. அவை,

பாலியல் தொடர்பு,
கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துதல்,
பிறப்புறுப்பு சுகாதாரம் இன்மை,
மெனோபாஸ் கரகாட்டம்,
நீரிழிவு நோய்,
பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம்,
சிறுநீரை அடக்குதல்,
ஆகிய காரணங்களால் பெண்களுக்கு அதிகமாக சிறுநீர் பாதை செய்யப்படுகிறது.

சீரக தண்ணீர்

தினமும் சீரகத் தண்ணீர் குடிக்கும் பொழுது உடலில் ஏராளமான நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக உடல் எடை குறைவது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது, ஜீரண ஆற்றலை மேம்படுத்துவது போன்றவற்றிற்கு உதவி செய்யும்.

அதோடு சிறுநீர்ப் பாதை தொற்று இருப்பவர்களுக்கும் இது நல்ல தீர்வாக இருக்கும். ஏனென்றால் சீரகத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பிறப்புறுப்பு பகுதிகளில் உண்டாகும் கிருமி தொற்றுகளை அளித்து சரிசெய்யும்.

சிறுநீர் பாதை தொற்று இருக்கும் சமயத்தில் தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை இந்த சீரக தண்ணீரை காலை மற்றும் மாலை என இரண்டு வலியும் எடுத்துக் கொண்டு வர நல்ல மாற்றம் தெரியும்.

தண்ணீர் குடித்தல்

பொதுவாகவே பெண்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பதில்லை. இதுவும் பிறப்புறுப்பு பகுதியில் வறட்சியை ஏற்படுத்தும். அதனால் தினசரி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த சிறுநீர் பாதை தொற்று இருக்கும் சமயத்தில் வழக்கத்தை விட இரண்டு டம்ளர் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிகமாக தண்ணீர் குடிக்கும்பொழுது அதை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். அது சிறுநீர் பாதையில் ஏற்பட்டிருக்கும் தொற்றுகளும் வெளியேறும் அதன் தீவிரமும் குறையும்.

அதனால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறப்புறுப்பு சுகாதாரம்

சிறுநீர் பாதையிலே ஏற்படும் தொற்றுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று இந்த பிறப்புறுப்பு சுகாதாரம்தான்.

முடிந்தவரையில் பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது .அதேசமயம் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்கவும் கூடாது. அது மிக மிக ஆபத்தில் கொண்டு போய்விடும்.

சிறுநீர் கழித்து முடித்தவுடன் பிறப்புறுப்பு பகுதியைச் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். ஆனால் பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்வதற்கு சோப்பு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

இறுதியாக

பெண்களுக்கு அதிகமாக ஏன் சிறுநீரக பாதை தொற்று ஏற்படுகிறது என்பதையும் அதற்கான காரணங்கள் அறிகுறிகள் ஆகியவற்றையும் இதை நம்முடைய அன்றாட சில பழக்க வழக்கத்தின் மூலம் எப்படி தடுக்க முடியும் என்பதையும் பார்த்திருப்பீர்கள் இதை பின்பற்றுங்கள் சிறுநீர்ப்பாதை தொற்று வராமல் தடுத்து விடுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.