“மாத வருமானம் ரூ. 12,000.. “அப்பாவின் கஷ்டம் தீர்ந்தது!” – ஏலத்தின் நடுவே கதறி அழுத பிரசாந்த் வீர்! வறுமையை வீழ்த்திய வாலிபரின் 'மிராக்கிள்' கதை..!!!
SeithiSolai Tamil December 18, 2025 02:48 PM

அபுதாபியில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இளம் ஆல்-ரவுண்டர் பிரசாந்த் வீர். மாதம் வெறும் ரூ. 12,000 வருமானம் ஈட்டும் ஏழைக் குடும்பப் பின்னணியைக் கொண்ட இவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் போட்டிக்குப் பிறகு ரூ. 14.20 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது.

உள்நாட்டுப் போட்டிகளில், குறிப்பாக சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அதிரடி பேட்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் முத்திரை பதித்த பிரசாந்த், தனது அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திலிருந்து பல மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார்.

கிரிக்கெட் உபகரணங்கள் வாங்கக் கூட வசதியின்றி, தந்தையின் கடின உழைப்பிலும் கடனுதவியிலும் தனது கனவைத் தொடர்ந்த இவர், “குடும்பத்தின் கஷ்டங்கள் தீர வேண்டும் என்ற தனது நீண்ட நாள் பிரார்த்தனை இன்று நிறைவேறியுள்ளதாக” நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வறுமை என்பது ஒருபோதும் லட்சியத்திற்குத் தடையல்ல என்பதை நிரூபித்துள்ள பிரசாந்த் வீருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.