மக்களை மிரட்டும் அரசு…. பிள்ளைகளுக்காகப் பனியில் நடுங்கும் பெற்றோர்கள்…. சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்….!!
SeithiSolai Tamil December 25, 2025 09:48 AM

சீனாவில் நிலவும் உறைபனி மற்றும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிட் பரிசோதனை (PCR Test) செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் விருப்பத்தின் பேரில் மக்கள் அங்கு நிற்கவில்லை; மாறாக, அரசாங்கத்தின் கடுமையான மிரட்டல் காரணமாகவே இந்தப் பனிப்புயலிலும் மக்கள் நடுங்கிக் கொண்டு நிற்கின்றனர்.

இந்தச் சோதனையைச் செய்ய மறுப்பவர்களுக்கு “சமூகக் கடன் புள்ளிகள்” (Social Credit Points) குறைக்கப்படும் என்றும், அரசாங்கத்தின் நலத்திட்டங்களைப் பெறுவதிலிருந்து அவர்கள் அதிரடியாக நீக்கப்படுவார்கள் என்றும் சீனா அறிவித்துள்ளது. இந்தக் கட்டாயச் சோதனையின் பாதிப்பு அந்த நபர்களோடு முடிந்துவிடாது என்பதுதான் அங்குள்ள மிகப்பெரிய சோகம்.

ஒரு நபர் பரிசோதனை செய்யத் தவறினால், அது அவர்களின் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வீடு வாங்குவது வரை அனைத்தையும் பாதிக்கும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. தங்களது குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உயிரைப் பறிக்கும் குளிரிலும் வேறு வழியின்றி மக்கள் வரிசையில் காத்திருக்கும் இந்தக் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைத்துள்ளது. மனித உரிமைகள் குறித்த பெரிய விவாதத்தை இந்தக் காணொளி கிளப்பியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.