உங்கள் பான் கார்டு செயலிழந்தால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மிகப்பெரிய பின்னடைவு என்னவென்றால், உங்களால் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய முடியாது. மேலும், நிலுவையில் உள்ள வரித் தொகையைத் திரும்பப் பெறவும் முடியாது. வங்கிச் சேவைகளைப் பொறுத்தவரை, புதிய வங்கிக் கணக்கையோ அல்லது டீமேட் கணக்கையோ திறக்க முடியாது.
வங்கி பரிவர்த்தனைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குறிப்பாக, ரூ.50,000-ஐ மீறும் ரொக்க பணம் நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். அதேபோல், செயலிழந்த பான் எண்ணுடன் கூடியவர்களுக்கு அதிகமான TDS பிடித்தம் செய்யப்படும் அபாயமும் உள்ளது.உங்களிடம் செயலிழந்த பான் கார்டு இருந்தால், அதிக TDS செலுத்த வேண்டும். மேலும், பாஸ்போர்ட் பெறுவதிலோ அல்லது அரசு மானியங்களைப் பெறுவதிலோ நீங்கள் சிக்கல்களைச் சந்திப்பீர்கள். உங்கள் பழைய பான் கார்டை இழந்தால், புதிய கார்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில், ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயமாக்கப்படும்.
இந்நிலையில், தங்கள் பான் கார்டு இன்னும் செயல்பாட்டிலா என்பதை உறுதி செய்வது மிகவும் அவசியமாகியுள்ளது. இதற்காக எந்த அலுவலகத்திற்கும் நேரில் செல்லத் தேவையில்லை.
உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது?