கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், தவெக நடத்திய பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாட்டிற்காக வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக என்ஐஏ (NIA) அமைப்பிற்கு ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை ஏற்படுமா? தவெக தரப்பு விளக்கம்!
விசாரணையின் முடிவில் ஜான் ஆரோக்கியசாமி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், தவெக தரப்பு இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. கட்சிக்கு நிதி வந்ததில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.