Womens Health: பெண்களிடையே அதிகரிக்கும் PCOS பிரச்சனை.. காரணம் என்ன..?
TV9 Tamil News February 10, 2026 09:48 PM

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) இன்றைய இளைய தலைமுறை பெண்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், நம் நாட்டில் 5 பெண்களில் (Womens Health) ஒருவர் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு இனப்பெருக்க சுகாதார பிரச்சினை மட்டுமல்ல, ஒரு சிக்கலான நாளமில்லா சுரப்பி அல்லது ஹார்மோன் கோளாறு ஆகும். PCOS பிரச்சனை பெண்களிடையே அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணம் நமது நவீனஉணவு சார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பதாகும்.

ALSO READ: கர்ப்பத்திற்காக முயற்சிக்கும் பெண்களா..? இந்த நேரத்தில் இணைவது கரு நிற்க உதவும்!

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்:

உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது கருப்பைகள் அதிக ஆண்ட்ரோஜன்களை (ஆண் ஹார்மோன்கள்) உற்பத்தி செய்ய தூண்டுகிறது. இது அண்டவிடுப்பை சீர்குலைத்து, கருப்பையில் சிறிய கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள் உருவாக காரணமாகிறது. பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகமாக உட்கொள்வது, உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவை பெண்களிடையே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனையை மேலும் தூண்டுகின்றன. இதை ஆரம்பகால கட்டத்திலேயே கட்டுப்படுத்தப்படாவிட்டால், இது வகை 2 சர்க்கரை மற்றும் இதய நோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும்.

பெரும்பாலான சூழ்நிலைகளில் இன்சுலின் எதிர்ப்புதான் PCOS-க்கு மூல காரணமாக பார்க்கப்படுகிறது. உடலின் செல்கள் இன்சுலினுக்கு ரியாக்ட் செய்வதை நிறுத்தும்போது, ​​இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகள் இரண்டும் அதிகரிக்கின்றன. இந்த அதிகரித்த இன்சுலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, முகத்தில் முடி, முகப்பரு மற்றும் விரைவான எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. உணவில் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்தை குறைப்பதன் மூலம் இதை மேம்படுத்தலாம்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல்:

இன்றைய PCOS-க்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாகும். இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது, மன அழுத்தம் நிறைந்த வேலை அட்டவணையைக் கொண்டிருப்பதும் உடலில் கார்டிசோலை (மன அழுத்த ஹார்மோன்) அதிகரிக்கிறது. அதிகரித்த மன அழுத்தம் நேரடியாக ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது. மேலும், உடல் செயல்பாடு இல்லாமை வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி PCOS அறிகுறிகளை மோசமாக்குகிறது.

மரப்பணு:

ஒரு தாய் அல்லது சகோதரிக்கு PCOS இருந்தால், மற்ற பெண்களுக்கு அது உருவாகும் ஆபத்து 50% அதிகரிக்கிறது. மரபியல் மாற்றப்பட முடியாது என்றாலும், சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை அதன் விளைவுகளை குறைக்கலாம்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் உணவு முறை எப்படி இருக்க வேண்டும்..? எதை கவனிக்க வேண்டும்?

அதாவது, PCOS-ஐ மருந்துகளால் மட்டும் குணப்படுத்த முடியாது. இதற்கு உங்கள் அன்றாட வழக்கத்தில் சரியான மாற்றங்களை செய்வது முக்கியம். உங்கள் உணவில் நார்ச்சத்து, புரதம் மற்றும் முழு தானியங்களைச் சேர்த்து, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். 5-10% எடை இழப்பு கூட ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.