சிவகார்த்திகேயன் வளர்ச்சியை அன்றே கணித்தேன்..நடிகை ராதிகா சரத்குமார் பாராட்டு
ராகேஷ் தாரா February 12, 2026 12:14 AM

கனா , வாழ் , கொட்டுக்காளி ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்தபடியாக வெளியாக இருக்கும் படம் தாய்க்கிழவி. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து பேசுகையில் ஒரு நடிகராக சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றியும் தயாரிப்பாளராகவும் அவர் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் ராதிகா

சிவகார்த்திகேயன் வளர்ச்சியை அன்றே கணித்தேன்

தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் பற்றி பேசியபோது " ஒரு தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படங்கள் சுவாரஸ்யமானவை. அதை நான் கமல் சாரிடம் பார்த்திருக்கிறேன். சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் போட்டீங்களே என்று கமலிடம் சொன்னால் அது என்னுடைய வேலை என்று சொல்வார். அவருடைய வளர்ச்சியை பார்த்து இந்த மாதிரியான முயற்சிகளை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருந்தது. ஒரு தயாரிப்பாளராக ஒவ்வொரு சீனும் தெரிந்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு நல்ல குழுவும் இருக்கிறது

 நான் சூரியுடன்  ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளியானது. அந்த படத்தைப் பார்த்து நான் இந்த பையன் ஒரு பெரிய நடிகராக வருவார் என்று சூரியிடம் சொன்னேன். என் கனவரிடமும் இந்த பையன்கிட்ட ஒரு வேகம் இருக்கிறது. நிச்சயமாக ஒரு பெரிய ஆளாக வருவார் என்று சொன்னேன். சூரிக்கு இதை கேட்டு ரொம்ப சந்தோஷன் " என்று ராதிகா சரத்குமார் கூறினார் 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.