இன்றைய நவீன காலத்தில் நாம் அனைவரும் தொழில்நுட்பத்தால் சூழப்பட்டுள்ளோம். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை டெக்னாலஜி இல்லாமல் எதையும் செய்வதில்லை. ஆனால், ஆன்மீகம் மற்றும் பூஜைகளில் மட்டும் இன்னும் பழைய முறைகளையே பின்பற்றி வருகிறோம். அந்த நம்பிக்கையையும் மாற்றி அமைக்கும் வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு திருமணத்தின் போதோ அல்லது பூஜையின் போதோ மணியடிக்க ஆள் இல்லாததால், அங்கிருந்த அர்ச்சகர் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியுள்ளார். அவர் தனது மொபைல் போனில் ‘பெல்’ (Bell) சத்தம் வரும் ஆப் ஒன்றைப் பதிவிறக்கம் செய்து, அதனை ஒலிக்க விட்டுவிட்டுத் தனது பூஜையைத் தடையின்றித் தொடர்ந்தார்.
‘விஷால் மால்வி’ என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தியப் பண்டிதர்கள் டெக்னாலஜியில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை” எனப் பாராட்டியும், கிண்டல் செய்தும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.