#BREAKING : திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி... முதலமைச்சரை சந்திக்கும் ப.சிதம்பரம்..!!
Top Tamil News March 04, 2026 05:48 AM

திமுக கொடுக்கும் 25 இடங்களையெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது என கிரிஷ் சோடங்கர் டெல்லியில் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், மார்ச் 3 ஆம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை தெரிவிக்குமாறு திமுக தரப்பு காங்கிரஸிடம் கறாராக கூறியிருந்தது.

கூட்டணிக்குள் புகைச்சல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிக்கலில் உள்ள தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற ப.சிதம்பரம் இறுதி முயற்சியில் ஈடுபட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.