இசைஞானி என்றால் இளையராஜா தான். அவருக்கு இந்தப் பட்டம் அவ்வளவு சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை. அந்தளவுக்கு அவரது ஒர்க் இருந்தது. ஒரு காலத்தில் இளையராஜா இல்லாத தமிழ்சினிமா இல்லை என்ற நிலை இருந்து வந்தது.
80 மற்றும் 90காலகட்டங்களில் உள்ள படங்களைப் பார்த்தால் பெரும்பாலும் இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான தமிழ்ப்படங்களாகத் தான் இருக்கும். அந்த வகையில் அவரிடம் இருந்து தனது படத்துக்கு எப்படி பாடலைப் பெற்றேன் என்று இயக்குனர் ராஜ்கபூர் வீடியோ ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளார்.
தாலாட்டு கேட்குதம்மா படத்தை நான் இயக்கினேன். அந்தப் படத்துக்கான கதையை இளையராஜாவிடம் அங்கங்கே ஸ்கிப் பண்ணி சொன்னேன். அது அவருக்குப் புரிஞ்சு போச்சு. உடனே சிச்சுவேஷனை சொல்லுன்னாரு. சொன்னதும் ஆர்மோனியத்துல அவரது கைகள் விளையாடின. டக் டக்னு அரை மணி நேரத்துல 6 பாட்டைக் கொடுத்துட்டாரு. அதை அப்படியே வாங்கிட்டு வந்து பொள்ளாச்சி பக்கம் சூட்டிங்கிற்குப் போயிட்டேன் என்கிறார் ராஜ் கபூர்.
அந்தக் காலகட்டத்தில் தான் இதயம் படமும் வெளியாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் பாண்டி பஜார் கடைகளில் எல்லாம் இதயமும், தாலாட்டு கேட்குதம்மா படப்பாடல்களும்தான் ஒலிக்குமாம். நேந்துகிட்ட நேர்த்திக்கடன், சுட்டி சுட்டி, சொன்ன பேச்சை, அண்ணனுக்கு, எம்மா எம்மா, அம்மா எனும் ஆகிய பாடல்கள் உள்ளன. 1991ல் இந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிரபுவுக்கு ஜோடியாகக் கனகா நடித்துள்ளார்.