பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த ஆண்டு வெளியான டியூட் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 100 கோடி வசூல் எடுத்தது. இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் மீண்டும் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார் . இப்படத்திற்கு அவருக்கு ரூ 50 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இயக்குநராகவும் நடிகராக அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து இளம் தலைமுறையினர் இடையே ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே , டிராகன் , டியூட் என இவர் நாயகனாக நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூல் அடித்தன. மற்ற நடிகர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியுள்ளார் . அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடிக்க இருக்கும் படம் குறித்து பல்வேறு தகவலகள் வெளிவந்தபடி இருக்கின்றன. சைன்ஸ் ஃபிக்ஷன் கதை ஒன்றை அவரே இயக்கி நடிக்க இருப்பதாக சில தகவலகள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ரைட்டர் படத்தை இயக்கிய பிரான்சிஸ் ஜேக்கப் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி டியூட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அவருக்கு ரூ 50 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது
டியூட் திரைப்படம் மொத்தமாக ரூ 26 கோடி பட்ஜெட்டில் உருவானது. இந்த படத்திற்கு 13 கோடி சம்பளமாக பெற்றார் பி.ஆர் . தற்போது அடுத்த படத்திற்கு ட்யூட் படத்தைவிட 4 மடங்கு அதிக சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது. முன்னணி நடிகர்களான தனுஷ் , சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களே தங்களது 25 ஆவது படத்திற்கு பின்பே 50 கோடி சம்பளத்தை எட்டினார்கள். ஆனால் பிரதீப் நாயகனாக 4 ஆவது படத்திலேயே அவர்கள் வாங்கும் அதே சம்பளத்தை பெறுகிறார் என்பது அவருக்கு இருக்கும் மார்கெட்டையே காட்டுகிறது.