நாக சைதன்யா மற்றும் மீணாக்ஷி செளத்ரி இணைந்து நடித்துள்ள விருஷகர்மா படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. ஹைதராபாத் பிரசாத் ஐமேக்ஸ் திரையரங்கில் நடந்த நிகழ்வில் நடிகர் நாக சைதன்யா கலந்துகொண்டார். மேடையில் அவர் அமரும் போது நாற்காலி சரிந்ததால் நாகசைதன்யா பின்னாள் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
விருபக்ஷா படத்தின் மூலம் கவனமீர்த்த இயக்குநர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் விருஷகர்மான. இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்க மீனாக்ஷ்னி செளதரி நாயகியாக நடித்துள்ளார். இன்று இப்படத்தின் முன்னோட்டம் ஹைதராபாதில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் மேடையில் நாற்காலியில் நாக சைதன்யா அமர்ந்தபோது அது சமநிலை இழந்து அவர் பின்னால் சரிந்து விழுந்தார். உடனே அவரை சுற்றி இருந்தவர்கள் உதவிக்கு வர நாக சைதன்யா எழுந்தார். தனக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என்பதை உறுதிபடுத்திய நாக சைதன்யா உற்சாகமிழக்காமல் படம் குறித்து பேசினார்.
Naga Chaitanya doesn't loses his cool! ❤️#NagaChaitanya #Vrushakarma
— Cine World Entertainment 🌍 (@CineWorldEnt) March 5, 2026
pic.twitter.com/tEyZrCiNpn
வ்ருஷகர்மா படம் குறித்து பேசிய நாக சைதன்யா " எனக்கு எப்போது மித்தாலஜிக்கல் படம் பண்ண வேண்டு என்கிற ஆசை இருந்து வந்தது. இந்த படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்த படத்தின் கதையை கேட்ட உடனே நான் கன்வின்ஸ் ஆகிவிட்டேன். இது என்னுடைய கரியரில் மிகச் சிறந்த படமாக இருக்கும். இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் தண்டுவைப் பற்றி என்னால் நாள் முழுக்க பேசிக்கொண்டே இருக்க முடியும் . இந்த படத்தின் மூலம் எனக்கு நிறைய விஷயங்களை அவர் கொடுத்திருக்கிறார் . எந்த வித சமரசமும் இல்லாமல் தான் கற்பனை செய்தபடியே இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த மாதிரியான ஒரு படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களும் இந்த படத்தில் இருக்கும். குறிப்பாக படத்தின் கடைசி அரை மணி நேரம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும்' என்று நாக சைதன்யா பேசினார்.