ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு உளவாளி தொடர்பான கதை இது. முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த படத்தின் இரண்டாம் பாகம் துரந்தர் தி ரிரெஞ்ச் என்கிற பெயரில் உலகமெங்கும் வெளியானது..
கடந்த 20ம் தேதி இந்த படம் தமிழில் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது. இத்தனைக்கும் இந்த படம் நான்கு மணி நேரம் நீளம் கொண்டது. இந்த படத்தை ஏற்கனவே இயக்குனர்கள் ஷங்கர், ராஜமவுலி போன்றவர்கள் பாராட்டி பேசியிருந்தனர்..
படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகமெங்கும் இப்படம் 600 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 400 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. இந்த படத்தை தமிழ் திரைப்பட பிரபலங்கள் பலரும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை நேற்று பார்த்தார்.
அதன்பின் படம் பார்த்துவிட்டு வெளியேறும் போது ‘படம் எப்படி இருக்கிறது?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘படம் சூப்பராக இருக்கிறது’ என சைகை செய்துவிட்டு சென்றார் ரஜினி.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..