கூலித் தொழிலாளி கொலை வழக்கு; அதிமுக கவுன்சிலருக்கு ஆயுள் தண்டனை..!
Seithipunal Tamil March 25, 2026 03:48 AM

2013-ஆம் ஆண்டு பால்ராஜ் என்பவர் கூலித் தொகை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ஜான் விக்டருக்கு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த ஜான் விக்டரின் தாயார் மேரி ஸ்டெல்லாவுக்கு ரூ.500 அபராதம், சகோதரி விமலாவுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.