இன்று (ஏப்ரல் 1, 2026) முதல் நடைமுறைக்கு வரும் நிதி மற்றும் வங்கித் துறை சார்ந்த 5 முக்கிய மாற்றங்கள் இதோ:
1. 60 ஆண்டுகால வருமான வரிச் சட்டம் மாற்றம்இந்தியாவின் 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் ‘வருமான வரிச் சட்டம் 2025’ அமலுக்கு வருகிறது.
புதிய வரி விதிப்பின் கீழ் (New Tax Regime), ₹12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. (சம்பளம் பெறுபவர்களுக்கு தரநிலை கழிவு – Standard Deduction ₹75,000 சேர்த்தால் ₹12.75 லட்சம் வரை வரி இல்லை).
ஏடிஎம்களில் யுபிஐ மூலம் பணம் எடுப்பதும் இனி வழக்கமான ஏடிஎம் பரிவர்த்தனை கணக்கிலேயே சேர்க்கப்படும்.
மாதாந்திர இலவச வரம்பைத் தாண்டி பணம் எடுக்கும்போது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹23 + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது சில குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பைக் குறைத்துள்ளது.
வாடிக்கையாளர் பாதுகாப்பைக் கருதி, சில கார்டுகளுக்கு ₹1 லட்சமாக இருந்த வரம்பு ₹50,000 முதல் ₹10,000 வரை (கார்டு வகையைப் பொறுத்து) குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே இனி ரீஃபண்ட் (Refund) கிடைக்கும். 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் ஒரு ரூபாய் கூட திரும்பக் கிடைக்காது.
72 – 24 மணி நேரத்திற்குள்: 25% கட்டணம் கழிக்கப்படும்.
24 – 8 மணி நேரத்திற்குள்: 50% கட்டணம் கழிக்கப்படும்.
இன்று முதல் ‘Assessment Year’ மற்றும் ‘Previous Year’ என்ற பழைய முறைகள் நீக்கப்பட்டு, நேரடியாக ‘Tax Year 2026-27’ என்ற புதிய நடைமுறை பின்பற்றப்படும். இது வரித் தாக்கல் செய்வதை எளிமையாக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.