அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவியவர்களை பாதுகாக்கும் சட்டத்தை இயற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது திப்ரூகரில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்ததுடன், செல்பியும் எடுத்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அசாமில் உள்ள பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினராக மாற்றி, ஊடுருவல்காரர்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதே காங்கிரஸின் திட்டம் என்றும், அம்பேத்கர் அரசியலமைப்பை காங்கிரஸ் சேதப்படுத்தியது என்றும்குறிப்பிட்டுள்ளார்.