தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். போடா போடி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசும்போது,
என் முன்னாடிதான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் கதை ஒவ்வொரு படிக்கட்டா வளந்துச்சு. முதல்ல என்கிட்ட வந்து சொன்னப்ப டேய் சும்மா இருடானு சொன்னேன். அப்படிலா இல்லடா.. டேய் நிஜமாவேடா அப்படினு சொன்னான். எனக்கு கொஞ்சம் நம்ப முடியல. கொஞ்சம் கடுப்பாவும் இருந்துச்சு. நிஜமாவும் நயன்தாரா உன்னை லவ் பண்றாங்களானு கேட்டேன். ஆமாடானு சொன்னப்ப எனக்கு இதயம் எல்லாம் வெடிக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா, அவன் என் நண்பன்.
#RjBalaji: When vicky told me that he's in love with Nayanthara, i didn't believe him.. enaku konjam kadupa irundhuchu.. Heart lam vedikra madhri irunchu..😄 When i asked nayanthara, She said, "Aama Nae.." even now, They Still love each other alot..🤝pic.twitter.com/23aQIXJh4y
— Laxmi Kanth (@iammoviebuff007) April 7, 2026
அப்புறம் ரொம்ப சந்தோஷமா போயிட்டு நயன்தாராகிட்ட கேட்டேன். நீ விக்கியை லவ் பண்றியானு கேக்கும்போது, ஆமாண்ணே அப்படினு சொன்னா. அன்னைக்கு பாத்த காதல் இன்னைக்கும் அவங்க அப்படித்தான் காதலிக்குறாங்க உருகி, உருகி. நயன்தாராவுக்கு விக்கியை பிடிக்கும். அனிருத்திற்கு விக்கியைப் பிடிக்கும். எல்லாருக்கும் பிடிச்ச பிரதீப் ரங்கநாதன் அவரைப் பிடிச்சு படம் பண்றாங்க.
இவ்வாறு அவர் கூறினார்.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே நட்பு உருவாகி அது காதலாக மாறியது. பின்னர், இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடிதான் படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்திருந்தார்.
பின்னர், அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஆர்ஜே பாலாஜி ஆகிய 3 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.