“இனி ரத்த ஆறு ஓடாது”… ஈரான் விவகாரத்தில் மோடி அரசின் அதிரடி ரியாக்ஷன்… உலகமே உற்று நோக்கிய அந்த ஒரு நிமிடம்…!!!
SeithiSolai Tamil April 08, 2026 11:48 PM

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா முழுமனதுடன் வரவேற்றுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போரினால் மக்கள் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட இந்த முயற்சி பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் என்றும், இதன் மூலம் அப்பாவி மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனால் மனிதாபிமான அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மிகவும் அவசியமானது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. நீண்ட கால மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், சீர்குலைந்த வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் இந்த அமைதி ஒப்பந்தம் ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

இந்நிலையில் உலக அமைதிக்காக இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்பதையும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுகளே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தர முடிவைத் தரும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.