இந்த சாமியாரை சும்மா விடாதீங்க..! என்னை பலாத்காரம் செய்துவிட்டார்.. நடு ரோட்டில் கதறி அழுத சிறுமி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
SeithiSolai Tamil April 09, 2026 04:48 PM

பிருந்தாவனப் பகுதியில் சிறுமி ஒருவர் கதறி அழுது சாமியார் மீது பாலியல் புகார் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது 17 வயது சிறுமி ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டு, “இந்தச் சாமியார் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்” என்று கதறி அழுதார். அவரது தாய் அவரைச் சமாதானப்படுத்த முயல, பொதுமக்கள் திகைத்து நின்றனர். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மதுரா காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கியது.

மதுராவின் ஜெயந்த் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லலிதா ஆசிரமம் அருகே காய்கறி கடை நடத்தி வரும் பிரகாஷ் சந்திர பெஹ்ரா என்ற சாமியார் மீது அந்தச் சிறுமி புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CO) பிரீதம் பால் சிங், சாமியார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Republic Bharat (@republicbharat)