அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?
CineReporters Tamil April 10, 2026 03:48 AM

பொதுவாக திரையுலகில் பாடுவாங்க. ஆனா ஆடத் தெரியாது. நல்லா நடிப்பாங்க. ஆனா சண்டைக்காட்சிகள் வராது. நல்லா சண்டை போட்டா சோகக் காட்சிகள் வராது. ஆனா எல்லாம் தெரிந்து எடிட்டிங், தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவங்க இருக்காங்களான்னு கேட்டா அந்தக் காலத்துல புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தியாகராஜபாகவதர் நல்லா பாடுவாங்க.

ஆனா ஆடத் தெரியாது. பியு.சின்னப்பா எல்லாம் தெரிந்தவர். ஆனா அவருக்கு தொழில்நுட்பம் தெரியாது. எம்ஜிஆர் சதிலீலாவதியில காலடி எடுத்து வைத்தார். 1958ல தன்னோட சொந்தப் படமான நாடோடி மன்னனை இயக்குகிறார். டபுள் ஆக்ட்.

இந்தப் படம் ஓடுனா நான் மன்னன். இல்லன்னா நாடோடிங்கறாரு. படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அவரோட உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அவருக்கு நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். உதாரணத்துக்கு டிஆர்.ராமண்ணா இவரை வைத்து படம் இயக்குகிறார்.

பாசம்னு ஒரு படம். கடைசியில கதாநாயகன் இறந்த போற மாதிரி காட்சி. வேண்டாம். இந்தப் படத்துல நான் இறந்து போற மாதிரி காட்சி வைத்தா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு எம்ஜிஆர் சொன்னாராம். பாட்டு பெரிய ஹிட். ஆனா படம் ஹிட் இல்ல.

நாளை நமதே படத்துல 2 எம்ஜிஆர்ல ஒருத்தர் கருப்பா திருடனா நடிச்சிருப்பாரு. அது ஓடல. பொதுவா நெகடிவ் கேரக்டர் பண்ண மாட்டாரு. அவரு இறந்த மாதிரி காமிச்ச ராஜா தேசிங்கு ஓடல. ஆனா அவரு இறந்து போற மாதிரி காமிச்சி சாமியாகிட்டாருன்ன மதுரை வீரன் ஓடுச்சு. பாட்டு, சண்டைக்காட்சி அவரு மேற்பார்வையில தான் நடக்கும்.

கதாநாயகன், கதாநாயகி, சண்டைக்காட்சி, யாரு இசை அமைக்கணும்? யார் வசனம் எழுதணும் எல்லாமே அவருக்குத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.