406,771 கி.மீ கடந்து நிலவை சுத்தி வந்தாச்சு .. நாளை பூமிக்குத் திரும்பும் விண்வெளி வீரர்கள்... நாசா சாதனை!
Dinamaalai April 11, 2026 05:48 AM

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 'ஆர்டெமிஸ்-2' திட்டத்தின் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் மாபெரும் முயற்சியில் ஒரு பிரம்மாண்ட வெற்றியை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, ஒரியன் விண்கலம் மூலம் ஒரு பெண் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி வைத்தது நாசா. இவர்கள் நிலவைச் சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதுடன், சுமார் 406,771 கி.மீ தொலைவு வரை பயணித்து நிலவுக்கு மிக அருகில் சென்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, நிலவின் மர்மமான பின்புறத்தை நேரில் பார்த்த மனிதர்கள் என்கிற பெருமையையும் இவர்கள் தட்டிச் சென்றுள்ளனர்.

View this post on Instagram

A post shared by ET NOW (@etnow)