ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 20வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 12ம் தேதி மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் வான்கடே மைதானத்தில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பெங்களூரு அணி தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. 2015-ல், இதே மைதானத்தில் பெங்களூரு அணி 235 ரன்கள் எடுத்திருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ALSO READ: கிளவுஸ் சர்ச்சை.. டெல்லியின் தோல்விக்கு நான்காவது நடுவர் காரணமா?
241 ரன்கள் இலக்கு:மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸ் சிறப்பாகத் தொடங்கிய போதிலும், 6வது ஓவரில் ரோஹித் சர்மா 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார். வலது தொடை தசைநார் காயம் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியவில்லை. இதற்கிடையில், ரியான் ரிகல்டன் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரன் சேஸிங்கிற்கு அடித்தளம் அமைத்தார். சூர்யகுமார் யாதவும் 22 பந்துகளில் 33 ரன்களும்,திலக் வர்மா 1 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். பின்னர் ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனாலும், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் இறுதிவரை போராடி, 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார்; இருப்பினும், அணி இலக்கை எட்டுவதற்கு 18 ரன்கள் குறைவாகப் பெற்றது. ஆர்சிபி அணிக்காக சுயாஷ் சர்மா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரென்ட் போல்ட், ஷர்துல் தாக்கூர் மற்றும் ரசிக் சலாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகள்இந்த சீசனில் மும்பை அணிக்கு இது மூன்றாவது தொடர்ச்சியான தோல்வியாகும். நான்கு போட்டிகளில் அவர்களால் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற முடிந்துள்ளது. இதற்கிடையில், ஆர்சிபி அணி இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று, இந்த சீசனில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ALSO READ: சொந்த மண்ணில் வீழ்ந்த லக்னோ.. 2வது வெற்றியை பதிவு செய்த குஜராத்!
கலக்கிய பெங்களூரு அணி:விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோரின் சிறப்பான தொடக்கத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கியது. இவர்கள் இருவரும் இணைந்து பவர்பிளேயில் 71 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து, விராட்டும் சால்ட்டும் இணைந்து 120 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்தனர். ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் விளாசினார். அடுத்ததாக உள்ளே வந்த கேப்டன் ரஜத் படிதார் களமிறங்கிய உடனேயே அதிரடியாக ஆடி, 17 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இது ஆர்சிபி அணிக்காக அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக அரைசதமாகும். இறுதியாக படிதார் 20 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
இதற்கிடையில், விராட் கோலி 38 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். டிம் டேவிட்டும் கடைசி ஓவர்களில் அபாரமாக விளையாடி, 16 பந்துகளில் 34 ரன்கள் குவித்து, பெங்களூரு அணி 240 ரன்கள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கை எட்ட உதவினார்.