Thalaivar 173: சுந்தர்.சியை தொடர்ந்து சிபியும் விலகல்?!.. ரஜினி படத்தை இயக்குவது அவரா?..
CineReporters Tamil April 13, 2026 06:48 PM

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 173வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது..

ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன் பின் சிபிச் சக்கரவர்த்தி, ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. இறுதியில் சிபிச் சக்கரவர்த்தி ஓகே செய்யப்பட்டார்.. அதோடு ரஜினியின் புதிய படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என ரஜினியும் செய்தியாளர்களிடம் தொடர்ந்து சொல்லி வந்தார். திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி வெளியேறிவிட்டதாகவும் அவருக்கு பதில் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வர் மாரிமுத்து இயக்கப்போவதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.

சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். ரஜினி 173-வது படத்திலிருந்து இதுவரை இரண்டு இயக்குனர்கள் விலகி விட்டது பேசுபொருளாக மாறியிருக்கிறது. சிபிச்சக்ரவரத்தி என்ன காரணத்திற்காக இந்த் படத்திலிருந்து விலகியிருக்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.