சிவகங்கை மக்களுக்கு கோடையில் ஒரு குளிர்ச்சியான செய்தி... கோடைகால பயிற்சி முகாம் துவங்குகிறது !
சிவகங்கை மாவட்டம் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்களுக்கான மாவட்ட அளவிலான உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம்கள் வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது - மாவட்டஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.
2026-ம் ஆண்டிற்கான உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் 2026-ம் ஆண்டிற்கான உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. அந்தவகையில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, ஹாக்கி, கோ-கோ ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகள் வருகின்ற 17.04.2026 (வெள்ளிக்கிழமை) முதல் 01.05.2026 (வெள்ளிக்கிழமை) வரை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம்
இக்கோடைகால பயிற்சி முகாமில், 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடத்தப்படும். இதற்கான பயிற்சி கட்டணம் ஏதும் கிடையாது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.
மேலும், இப்பயிற்சி முகாம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்களை 7401703503 என்ற அலைபேசி எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை 04575 – 299293 என்ற தொலைபேசி எண்ணிலும் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். எனவே, சிவகங்கை மாவட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்கள் இக்கோடை கால பயற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.