“விஞ்ஞானிகளே வியந்து போவார்கள்!” வைக்கோல் தூக்க இவ்வளவு சுலபமான வழியா? வெறும் மூங்கில் குச்சியால் இந்த கிராமத்து மக்கள் செய்த மேஜிக்கைப் பாருங்கள்.. வைரல் வீடியோ..!!
SeithiSolai Tamil April 19, 2026 11:48 AM

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, கிராமப்புற மக்களின் அபாரமான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. கனமான வைக்கோல் கட்டுகளைத் தூக்குவது கடினமான வேலை என்பதால், இரண்டு கிராமவாசிகள் மூங்கிலைப் பயன்படுத்தி ஒரு எளிய தந்திரத்தைக் கையாண்டுள்ளனர்.

வழக்கமாக இவ்வளவு பெரிய சுமைகளைத் தூக்க கூடுதல் நபர்களின் உதவி தேவைப்படும். ஆனால், இவர்கள் மூங்கிலால் ஒரு தற்காலிகத் தாங்கியை உருவாக்கி, அதன் மூலம் வேலையை எளிதாக்கியுள்ளனர்.

முதலில் ஒரு வைக்கோல் கட்டைத் தூக்கி அந்த மூங்கில் தாங்கியின் மீது வைக்கின்றனர். பின்னர் இரண்டாவது கட்டை ஒரு பெண் எளிதாகத் தூக்கிக்கொள்ள, மூங்கிலின் மீது வைக்கப்பட்டிருந்த முதல் கட்டை அந்த ஆண் நபர் யாருடைய உதவியும் இன்றித் தானாகவே தூக்கிக்கொண்டு செல்கிறார்.

“>

 

விலையுயர்ந்த இயந்திரங்கள் எதுவுமின்றி, வெறும் பொது அறிவையும் எளிய வளங்களையும் கொண்டு கடினமான வேலையைச் சுலபமாக்கிய இவர்களின் திறமையைக் கண்டு இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.