விஜய் ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது.. தவெகவுக்கு ஷாக் கொடுத்த பொன்னையன்...
Webdunia Tamil May 04, 2026 04:48 PM


தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. துவக்கத்தில் தபால் ஓட்டுகளில் திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் முதலிடத்திலும், இரண்டாம் இடத்திற்கு அதிமுகவும், 3ம் இடத்திற்கு திமுகவும் சென்றது.

தற்போது 234 தொகுதிகளிலும் வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்துவிட்ட நிலையில் 104 தொகுதிகளில் தவெகவும், 68 தொகுதிகளில் அதிமுகவும், 62 தொகுதிகளில் திமுகவும் முன்னிலையில் இருக்கிறது.

ஆட்சி அமைக்க 117 தொகுதிகளில் வெற்றி தேவை என்கிற நிலையில் விஜயின் தவெக 110 தொகுதிளை நெருங்கிவிட்டதால் எப்படியும் அந்த இடத்தை பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்காமல் போனால் அதிமுக உதவியோடு தவெக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான், அதிமுகவின் சீனியர் தலைவர் பொன்னையன் ‘தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது’ என சொல்லியிருக்கிறார். ஆனாலும், நிலைமை மாறும் என கணிக்கப்படுகிறது.


© Copyright @2026 LIDEA. All Rights Reserved.