பூஜை செய்ய நிர்வாண போட்டோ வேணுமாம்.. போலி ஜோதிடரின் லீலைகள் அம்பலம் – வலைவீசும் போலீஸ்…!!!
SeithiSolai Tamil May 04, 2026 09:49 PM

கர்நாடக மாநிலம் ராமநகரைச் சேர்ந்த கிரண் என்ற நபர், தன்னை ஒரு ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் தான் நடத்தவிருக்கும் ஒரு சிறப்பு பூஜைக்காக, உடலில் மச்சம் இல்லாத ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படம் தேவைப்படுவதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் அவர் ஆசை வார்த்தைகளைத் தூண்டினார்.

மேலும் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பெற்றுத் தருவதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் ஆமிஷம் காட்டியுள்ளார். அந்தப் பெண் இதற்கு மறுப்பு தெரிவித்தும், கடந்த ஒரு வாரமாக கிரண் தொடர்ந்து செல்போன் வழியாக ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி அப்பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இதனால் பொறுமையிழந்த அந்தப் பெண், ராமநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்போது தலைமறைவாக உள்ள அந்தப் போலி ஜோதிடரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.