தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் தற்போது 74 வருடமாக ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பது உறுதியாக விட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் வீட்டிலிருந்து காரில் வெளியே புறப்பட்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்ற செய்தியை அறிந்ததும் முதல் முறையாக தன்னுடைய பெற்றோரையே அவர் சந்திக்கிறார். மேலும் தன் பெற்றோரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக தற்போது அவர்களுடைய இல்லத்திற்கு நடிகர் விஜய் புறப்பட்டு சென்றார்.