மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு? மே 15-ல் வரவு வைக்க அரசு தீவிரம் - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
Dinamaalai May 12, 2026 10:48 PM

தமிழகத்தில் மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் பணிகள் குறித்த முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, வரும் மே 15-ம் தேதி தகுதியுள்ள அனைத்துப் பெண்களின் வங்கிக் கணக்கிலும் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. முந்தைய அரசின் திட்டங்களைத் தற்போதைய அரசும் தடையின்றித் தொடர்ந்து செயல்படுத்தி வருவது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோடை விடுமுறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இந்த கூடுதல் நிதி உதவி குடும்பத் தலைவிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அரசாணை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருப்பதால், இந்த மாதமே கூடுதல் தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகளிடையே அதிகரித்துள்ளது. உரிமைத் தொகை உயர்வு குறித்த கோப்புகள் தற்போது நிதித்துறையின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை இம்முறை சாத்தியமில்லையெனில், ஜூன் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.