Virat Kohli: ``விராட் கோலி மீது அவதூறு பரப்ப பேரம் பேசப்பட்டது' - உண்மையை உடைத்த ஜெர்மன் மாடல்!
Vikatan May 12, 2026 11:48 PM

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது அவதூறு பரப்புவதற்காக, சில ஊடகங்கள் தனக்கு பணம் தர முன்வந்ததாக ஜெர்மன் மாடல் லிஸ்லாஸ் (Lyslass) தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில காலத்திற்கு முன்பு, லிஸ்லாஸின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை விராட் கோலி 'லைக்' செய்ததாக ஒரு தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லிஸ்லாஸ் கவனம் பெற்றார். இந்த நிலையில், 'Filmymantra Media' ஊடகத்திற்கு லிஸ்லாஸ் பேட்டி அளித்திருந்தார். அதில், ``நான் சிறுவயதில் கேப் டவுன் கடற்கரை பகுதியில் வளர்ந்தவள். இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்தமான, சொந்த ஊர் போன்ற உணர்வைத் தரும் இடம் பெங்களூரு தான். இந்தியாவுக்கு வந்த பிறகுதான் கிரிக்கெட் விளையாட்டைத் தெரிந்துகொண்டேன். எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்.

லிஸ்லாஸ்

ஐபிஎல் தொடரில் கோலி விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் தீவிர ஆதரவாளர் நான். சில பத்திரிகையாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, விராட் கோலியைப் பற்றி தவறாகப் பேசுவதற்கும், அவர் செய்யாத காரியங்களைச் செய்ததாகக் கூறுவதற்கும் எனக்குப் பணம் தருவதாகக் கூறினார்கள். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயலும் இந்த செய்தி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

யார் இந்த லிஸ்லாஸ்?

தென்னாப்பிரிக்காவில் பிறந்த லிஸ்லாஸ், ஒரு பன்முகத் திறமையாளர். ஜெர்மன் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர், டச்சு, பிரஞ்சு, ரஷ்யன் என பல மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். நீச்சல் வீரரும் (Lifeguard) கூட. பாடல் எழுதுதல் மற்றும் உணவு சார்ந்த பயண வீடியோக்கள் மூலம் இவர் பிரபலமானவர். தற்போது விராட் கோலி குறித்துப் பேசி சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிச்சம் பெற்றிருக்கிறார்.

``அங்க என்ன பண்ற.. சீக்கிரம் சேப்பாக்கத்துக்கு ஓடி வா!" - அஸ்வின் போட்ட போஸ்ட்! - வைரலாகும் போட்டோ!
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.