பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த வேண்டுகோளை ஏற்று, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதியரசர் டி.டி. பன்சால் அவர்கள் ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ வாகனத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் தனது இல்லத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீதிமன்றத்திற்கு மிதிவண்டியில் பயணம் செய்தார்.
மேலும் நீதித்துறை உயர் பதவியில் இருப்பவர் எளிமையுடனும், சமூகப் பொறுப்புணர்வுடனும் இவ்வாறு பொதுவெளியில் சைக்கிள் ஓட்டிச் சென்றது அங்கிருந்த பொதுமக்களையும் மற்ற ஊழியர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. எரிபொருளைச் சேமிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
“>
இந்நிலையில் நீதியரசர் பன்சால் மிதிவண்டியில் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவருடைய இந்தச் செயல், சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள் நினைத்தால் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பலரும் இவரது இந்தச் செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.