தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் கூடுதலாக தலா 50 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தலா 100 ஆக இருந்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.