CJP Protest Lathi Charge: டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
மருத்துவக் படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்கள்பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகமழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன இன்று, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றதை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் உரிய அனுமதி பெறவில்லை என காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளையும் தாண்டி பேரணியில் ஈடுபட முயன்றவர்கள் மீது, கண்மூடித்தனமாக தடியடி நடத்தப்பட்டுள்ளது.
உரிய அனுமதி இல்லாத நிலையில் தடை உத்தரவை மீறி பேரணி ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. அதனையும் மீறி பேரணியாக தடுக்க முயன்ற காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது கடும் தடியடி நடத்தினர். இதனால் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையின் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்ல முண்டியடித்துக்கொண்டு இளைஞர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். பெண்கள் உட்பட பலரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
#WATCH | Delhi | Protesters gathered for CJP's protest march clash with RPF personnel at Jantar Mantar; RPF personnel & police use lathis for crowd control pic.twitter.com/gijaCjJksW
— ANI (@ANI) July 20, 2026
போராட்டக்காரர்களில் ஒருவரை நான்கைந்து காவலர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். பொறுமையை இழந்த நபர் இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு அடிங்க சார், அடிங்க என கத்த, காவலர்கள் அடிப்பதை கைவிட்டு நின்றனர். பின்பு அங்கு வந்த பெண் காவலர் அந்த நபரை, அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு சூழ்ந்த போராட்டக்காரர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி வந்தே மாதரம் முழக்கத்தை ஏற்படுத்தினர்.