இப்போதெல்லாம், மோசடிக்காரர்கள் மக்களை குறிவைக்க புதிய முறைகளை கையாள்கின்றனர். மக்களை தங்கள் வலையில் சிக்க வைப்பதற்காக, போலி KYC புதுப்பிப்புச் செய்திகளை அனுப்புவதே மிகவும் பொதுவான முறையாகும். எனவே, சமீபத்தில் KYC புதுப்பிப்பு என்ற பெயரில் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என எச்சரிக்கும் SMS அல்லது WhatsApp செய்தியை நீங்கள் பெற்றிருந்தால், எச்சரிக்கையாக இருங்கள்.
இப்போதெல்லாம், இணையக் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றுவதற்காக போலிச் செய்திகளை அனுப்பி வருகின்றனர். அந்தச் செய்திகளில், உடனடியாக தங்களது கே.ஒய்.சி (KYC) சரிபார்ப்பை முடிக்காவிட்டால், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று கூறும் ஒரு இணைப்பு பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும். இதுபோன்ற செய்திகளை பார்த்தவுடன், பெரும்பாலான மக்கள் பீதியடைந்து, யோசிக்காமல் அந்த இணைப்பை கிளிக் செய்துவிடுகின்றனர். இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்தியுள்ளது.
முதலில், இணைய குற்றவாளிகள் KYC-ஐ புதுப்பிக்குமாறு கோரி, போலியான SMS அல்லது WhatsApp செய்திகளை அனுப்புகின்றனர். அந்தச் செய்திகளில், உங்கள் KYC-ஐ உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவ்வாறு செய்யத் தவறினால் வங்கிக் கணக்கு மூடப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற சமயங்களில், மக்கள் பெரும்பாலும் பீதியடைந்து, கொடுக்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்து அந்த வலையில் சிக்கிக்கொள்கின்றனர். பின்னர், மோசடிக்காரர்கள் வங்கித் தகவல்களை பெற்று, கணக்கிலிருந்து பணத்தை எடுத்துவிடுகின்றனர்.
மேற்கண்ட விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு, இதுபோன்ற போலி லிங்க்குகளை பெறும்போது, அவசரப்படாமல் யோசித்து, உங்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.