டெல்லி வந்தடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியை சந்தித்து உரையாடல்!
July 27, 2024 07:48 PM

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.

மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா உடனிருந்தார். முன்னதாக 'இந்தியா' கூட்டணியில் இருந்து பல்வேறு தலைவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த நிலையில், மம்தா பானர்ஜி டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.