பகீர்..! வழக்கறிஞரின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…!!
SeithiSolai Tamil July 27, 2024 08:48 PM

நாட்டில் சமீப காலமாக நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக தெரு நாய்கள் முதல் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் வரை குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை கடித்து விடுகிறது. இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் மட்டும் ரேபிஸ் நோய் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்திலும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது அந்த மாநிலத்தில் உள்ள பாரபாங்கி மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் திறந்தவெளியில் மலம் கழித்துள்ளார். அப்போது அங்கு வளர்ப்பு நாயான பிட்புல் நாய் வந்தது. இந்த நாய் திடீரென வழக்கறிஞரை தாக்கியதோடு அவருடைய அந்தரங்க உறுப்பை கடித்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார். மேலும் வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததில் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.