ரூ.14 ஆயிரம் கடனுக்காக நண்பனின் குழந்தைகளை கொன்ற கொடூரன் - ஆம்பூர் அருகே பயங்கரம்
ராஜேஷ். எஸ் September 20, 2024 03:44 PM
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே 14 ஆயிரம் ரூபாய் கடனுக்காக நண்பனின் 2 ஆண் குழந்தைகளை அழைத்துச்சென்று கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ் இவருக்கு, தர்ஷன் (4)  மற்றும் யோகித் (6)  என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச்சென்று திண்பண்டங்கள் வாங்கி தருவது வழக்கம்.
 
இந்நிலையில், அதே போல் வசந்த் நேற்று மாலை 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச்சென்றுள்ளார்.
 
அதனை தொடர்ந்து இரவு வெகு நேரம் ஆகியும் வசந்த் மற்றும் 2  குழந்தைகள் வீடு திரும்பாததால், வசந்தின் செல்போனுக்கு அழைத்த போது, செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், அச்சமடைந்த குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
புகாரின் பேரில் குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். காணாமல் போன இரண்டு குழந்தைகளும் வேலூர் மாவட்டம்.  சிங்கல்பாடி  அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோவிலின்  பின்புறம் சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய  காவல்துறையினர்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர்‌.
ஏரிப்பட்டி பகுதியில் உள்ள செங்காத்தம்மன் கோவிலின் பின்புறம் சடலமாக கிடந்த இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
அதனை தொடர்ந்து,  குழந்தைகளை கடைக்கு அழைத்து  செல்வதாக கூறி அழைத்து சென்று கொலை செய்த வசந்த் என்பவரை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டனர்.
 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வசந்தகுமார் பொறியியல் பட்டதாரியான நிலையில் இவரிடம் கட்டிட தொழிலாளிகளாக யோகராஜ் பணியாற்றி  வந்துள்ளார். யோகராஜ் வசந்தகுமாரிடம், 14 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல், யோகராஜ், காலம் தாழ்த்தி வந்த நிலையில், வசந்தகுமாரின் மனைவியிடம் யோகராஜ் கடனை திருப்பி செலுத்திவிட்டதாக   கூறியிருக்கிறார்.
 
இதனால் ஆத்திரமடைந்த  வசந்தகுமாரின் மனைவி தன்னிடம் கடனாக கொடுத்த பணத்தை வாங்கி வில்லை என வசந்த்குமார் பொய்கூறியதாக, நினைத்து, வசந்தகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
இதனால் வசந்தகுமார் அதிக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால், தனது மனைவியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தன்னுடன் மீண்டும் வாழ வைக்க வேண்டும் என யோகராஜிடம் வசந்த்குமார் கூறியதாகவும் அதற்கு யோகராஜ் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் யோகராஜின் இரண்டு 2 குழந்தைகளை  வைத்து  யோகராஜை மிரட்ட வசந்த்குமார்  2 குழந்தைகளையும் அழைத்துச்சென்றது காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும் நண்பனின் 2 ஆண் குழந்தைகளை கடைக்கு, அழைத்துச்சென்று, குழந்தைகளை கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.