வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியாத்தம் அருகே உள்ள ஏரிபட்டி பகுதியில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட ஒப்பந்ததாரர் ஆவார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குமார் நேற்று இரவு தன்னுடைய நண்பன் யோகராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவருடைய குழந்தைகள் ஆன தர்ஷன் (4), மற்றும் யோகித்தை (5) கடைக்கு வருமாறு கூறி வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றார். இந்நிலையில் நீண்ட நேரமாக குழந்தைகள் வீட்டிற்கு திருவாததால் பெற்றோர் வசந்தகுமாருக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் குழந்தைகளை தேடி சென்ற போது அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே குழந்தைகள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்து பெற்றோர் கதறி துடித்த நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வசந்தகுமாரை கைது செய்த நிலையில் குழந்தைகளின் பெற்றோருக்கு 14,000 ரூபாய் கொடுத்ததாகவும் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் கோவில் அருகே குழந்தைகள் கொல்லப்பட்டதால் நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..