டிக் டாக், டப் ஸ்மாஷ் என பிரபலமானவர் நடிகை மிருணாளினி. தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் அறிமுகமானவர் . இவர் எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக தமிழில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரோமியோ படத்தில் நடித்தார்.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 29 வயதான மிருணாளினி ரவி பெங்களூருவில் தனது தாயார் பெயரில் புதிய வீடு கட்டிய படங்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் கூறப்பட்டுள்ளது: அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் குழந்தை பருவத்தில், என் தந்தை ஒரு வீட்டைக் கட்டி, அம்மாவின் பெயரை வைத்தார்.
அன்றிலிருந்து எனக்கும் அம்மா பெயரில் வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது. இப்போது, என் கனவு நனவாகியுள்ளது. உங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் இல்லாமல் இவை எதுவும் நடந்திருக்காது. இதைச் செய்ய என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக கட்டிய இல்லத்திற்கு மொழி இல்லம் என பெயர் வைத்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா