வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி இப்படி கூறினார்
"என்னை வாழ வைத்த தெய்வங்களே. ஒருவர் ஒரு ஃப்ளாப் படம் கொடுத்தார் என்றால் அது ஒரு பெரிய டென்ஷன். ஒரு ஹிட் படம் கொடுத்தாலும் அடுத்த படமும் டென்ஷன் தான். முந்தைய படத்தின் சாதனையை இந்த படம் முறியடிக்க வேண்டும் என்று டென்ஷன் . ஒரு படம் ஹிட் ஆவதற்கு ஒரு மேஜிக் நடக்கும். ஜெயிலர் படத்திற்கு அந்த மேஜிக் நடந்தது. இன்றைய சூழலில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி பண்றது ரொம்ப கஷ்டமாகிடுச்சு. பல்வேறு இயக்குநர்களின் படங்களில் நடிப்பதால் மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. நான் ஜெய் பீம் படம் பார்த்தேன் எனக்கு அது பிடித்தது. பிறகு தான் தெரிந்தது அது அவருடைய இரண்டாவது படம் என்று. அவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. ஆனால் அவர் படம் டெக்னிக்கலி சூப்பராக இருந்தது. "