மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா நேற்று காலமானார். அவருக்கு வயது 80.
பிரபல நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உட்பட பல நடிகர்களுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை கவியூர் பொன்னம்மா. நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ், பொன்னம்மாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த பொன்னம்மாவுக்கு பிந்து என்கிற மகள் உள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா